Sunday, 29 October 2017

   எது வேண்டும் அன்பே?


உயிர் தந்தேன், உடல் தந்தேன்,
இதய சிம்மாசனமும் தந்தேன்,
வேண்டாமென்றாய்!
உதய காலம் வராமலா போகுமேன்றேன்,
கதை என தள்ளுகிறாய்!

பற்றிய கையை விடுத்து,
வெறுப்புடன் விழிகளை திருப்பி,
எனை விட்டு விலகினாயே, அப்போ,
என் உயிரும் எனை விட்டு விலகினதே, அன்பே!

கட்டான உன் உடல்,
பட்டான உன் முகம்,
சட்டென வாடியதை மனம் தாங்குதில்லையடி!
விட்டேனடி பெரும் பொய்யை!


மன்னித்தால் வாழ்வு!
ஏற்றுக்கொண்டால் ஏற்றம்!
என அன்பான பாதை இருக்க,
ஏன் உனக்கு பிடிவாதம்?

கரையேறும் காலம் அருகிலிருக்க,
உறை போட்டு உன் மனதை  மூடுவதேனோ?
உள்ளத்தில் கள்ளமில்லை, பெரும் காதல் மட்டுமே!
என்று புரிவாய் இதை?


உன் வெறுப்பின் நெருப்பில்
கருகவா?
உன் உயிரின் அணைப்பில்
உருகவா?
எது வேண்டும் அன்பே?

      



No comments:

Post a Comment