என் நேசமே!
பனி படர்ந்த மலையின்
சிகரம் காட்டி,
அடர் கானக இருட்டில்
இயற்கையின் ரகசியம் காட்டி,
ஆழ் கடலின்
அதிசயங்களும் காட்டி,
முரண்பாடான மனித
உறவுகளின் உரசல்கள் காட்டி
வாழ்வின் பரிணாமங்கள்
புரிதலும் உணர்த்தினாயே!
என் அருமை புத்தகமே!
வருவாயா வாழ்க்கை
முழுக்க?
என்னுடன் உறவாடி,
என்னை
மேம்படுத்த!!!!!!