இலக்கு தெரிந்தும் குழப்பம் ஏன்?
குறிக்கோள் இருந்தும் கலக்கம் ஏன்?
பலவீனம் திருத்தி பலத்தை உயர்த்தி
இலக்கை நோக்கி முயற்சி எடுத்தால்
உன் இடம் இதுவாக இருக்காது!
உயர்ந்த இடம் போக இதுதான் நேரம்!
தள்ளி போட்டால் காலம் உன்னை தள்ளி விடும்!
உள்ளிருக்கும் ஆற்றலை உனை
உயர்த்த உபயோகி! மங்கி போக விட்டு
மனம் போன போக்கில் போனால்,
உன் அறிவு சோர்ந்தால்,
எட்டுத்திக்கும் புகழ் பரவ வேண்டிய நீ
சொந்த வீட்டிலேயே காணமல் போவாய்!
உன் உயரம் நீயே அறிதல் வேண்டும்!
உன் அறிவு ஆற்றல் கம்பீரம் நான் காண வேண்டும்!
காத்திருக்கிறேன் உன் காதலியாய்!
ஆம்! உனை நான் அறிவேன்!
உன் ஆற்றலும் அறிவேன்!
எனை நீ அறியாய்!
No comments:
Post a Comment